Saturday, September 08, 2007

ஞாபகம் இருக்கிறது

ஞாபகம் இருக்கிறது
அவன் காசு கேட்கவில்லை
பசியை சொல்லவில்லை
தெருமுனையில்
குளிரில் விரைத்து
இறந்து போன கிழவன்
ஒரு கை நடுங்க
மறுகை கோர்த்து
அய்யா... ஒரு போர்வை
இருந்தா கொடுங்க
பல சமயம்
என்னிடம் கேட்டது
ஞாபகம் இருக்கிறது

4 comments:

  1. yaasippavarhalai ethanaiyo murai virattivittathu enakkum niyaabaham vanthuvittathu
    arumaiyaana kavithai + vali.....

    ReplyDelete
  2. முடிந்த பின்புதானே ஞானம் ...

    ReplyDelete
  3. வாசித்து முடித்த வேளையில் எனக்குள்ளும் நிறைந்திருந்தது குற்றவுணர்வு.

    ReplyDelete