Monday, December 24, 2007

கிளியின் புன்னகை

கூண்டு கிளியுடன்
வருவேன் என்று
காத்திருக்கும்
மகளிடம் போய்
எப்படிச் சொல்வேன்
வாங்கி வரும் வழியில்
கிளியை வானம் விட்டதும்
கூண்டினை தூக்கி எறிந்ததும்

கதைபோல் மகளிடம்
சொல்லும் போது உணரலாம்
பறவையின் சுதந்திரம்

அப்போது அவள் உதட்டில்
வந்து அமரும்
அந்த கிளியின் புன்னகை

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

1 comment:

  1. க(வி)தையை வாசித்த எங்கள் உதடுகளிலும் வந்தமர்ந்தது புன்னகை.

    ReplyDelete