Wednesday, June 18, 2008

கூர்காவின் கடிதம்

ஒருவன் கடிதம் படிக்க
மற்றவன் கேட்க
இசைக் கச்சேரி போலிருந்தது
கூர்காக்களின் மொழி

கேட்டுக் கொண்டே வந்தவன்
குழந்தையை கைகளில்
கொஞ்சுவது போல்
பாவனை செய்து
ஆட ஆரம்பித்து சிரித்தான்

தான் அப்பா ஆனதாக
மார் தட்டி
சத்தம் போட்டான்

ஓடிப்போய்
மிட்டாய் வாங்கி வந்து
எனக்கும் தந்ததில்
நினைத்தது சரி என்று
தெரிந்தது

தூர உணர்வுகளை
கொட்டிக் கொண்டிருந்தது
கடிதம்

என் நடை முடிந்து
வருகையில்
போயிருந்தான்
கடிதம் படித்தவன்

கடிதத்தின் எழுத்துக்களில்
விளையாடியபடியே இருந்தன
அமர்ந்திருந்த
கூர்காவின் கணகள்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

4 comments:

  1. ராஜா,

    உங்கள் கவிதைகள் எல்லாமே பிடித்தமானவையாக உள்ளன. இன்னும் குறுகிய கால இடைவெளியில் எழுத முடிந்தால் படிக்கும் எங்களுக்கு இன்பம் பெருகும்.
    இந்தக் கவிதையின் முதல் பத்தி மட்டுமே தனியே படித்தால் ஒரு அழகிய குறுங்கவிதை கிடைக்கிறது. வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. அனுஜன்யா
    மிக்க நன்றி
    அன்புடன்
    ராஜாசந்திரசேகர்

    ReplyDelete
  3. கூர்க்காக்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ பாவமாயிருக்கும் எனக்கு. இக்கவிதை அதை ஆழப் படுத்துகிறது.

    ReplyDelete
  4. தருமி
    என் மனநிலையில் உங்கள் மனமும்.
    நன்றியுடன்
    ராஜாசந்திரசேகர்

    ReplyDelete