Friday, April 03, 2009

குற்றவாளிகள்

குற்றவாளிகள் எல்லோரும்
தப்பி ஓடினார்கள்
வேகமாக விரட்டி வந்தும்
நம்மால் பிடிக்க
இயலவில்லை
கூடி நின்றவர்கள்
நம் முயற்சிகளுக்காக
பாராட்டி கைதட்டினார்கள்
குற்றவாளிகள்
ஓடிய திசையில்
புகை மூட்டம்
இறங்கிக் கொண்டிருந்தது
அடுத்த முறை
விட்டு விடாதீர்கள் என்று
வாழ்த்துக்களை வழங்கியபடி
பிரிந்து போனார்கள்
எனக்குள் ஒன்றும்
உனக்குள் ஒன்றுமாக
இரண்டு குற்றவாளிகள்
பதுங்கிப் போனதை
உணராத அவர்கள்

1 comment:

  1. எனக்குள் ஒன்றும்
    உனக்குள் ஒன்றுமாக
    இரண்டு குற்றவாளிகள்

    மிக அருமையான சிந்தனை வரிகள்

    அன்புடன்
    ஜகதீஸ்வரன்
    http://jackpoem.blogspot.com/

    ReplyDelete