Thursday, June 18, 2009

கடந்து போன வரிகள்

வெட்டப்பட்ட மரம்
துளிர்த்தது
இறந்துபோன முதியவர்
உயிர் பெற்றார்
ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து
முத்தமிட்டுச் சென்றது
மணல் அடியில்
கிடந்த வளையல் துண்டுகள்
கண்ணீரைக் காட்டின
கடல் மீன்
கரைக்கு வந்து
வார்த்தைகளைக்
கொட்டிவிட்டுப் போனது
இயற்கையின் பரிசுத்தத்தை
வீணாக்கியவர்கள்
தூக்கு தண்டனைப் பெற்றனர்
உதிர்ந்த இலை
உள்ளங்கையில்
விழும்போது
பூவாகி இருந்தது
சேமித்து வைக்கப்பட்ட கோடுகள்
ஓவியங்களாக
மாறிக்கொண்டே வந்தன
ஆண்துணை
தேடிய ஒருவன்
நகரத்து வீதிகளில்
அலைந்து கொண்டிருந்தான்
கடந்து போன
வரிகளைப் பார்த்தபடி
நடந்து கொண்டிருந்தேன் நான்

1 comment:

  1. some body cannot understand long poem. but your poem is very nice. writ only 4 to6 lines poem.

    ReplyDelete