Thursday, August 06, 2009

கவிதையின் ஏழாம் வரி

கவிதையின் ஏழாம் வரியை
பிடுங்கிக் கொண்டு
ஓடுகிறது குழந்தை

குழந்தை கலைத்துப் போட்ட
சொற்களுக்கிடையே
கண்டெடுக்கிறேன்
குழந்தை விட்டுச் சென்ற
கிளி பொம்மையை

கேட்டுத் தெரிந்து கொண்ட பின்
திரும்ப திரும்பச் சொல்லி
வீடு முழுதும்
தானியம் போல்
இறைத்துக் கொண்டிருந்தது கிளி
என் பெயரை

2 comments: