Sunday, November 08, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

12

எதுவும் செய்யவில்லை
நான்

எதையாவது செய்யாமலில்லை
இன்னொரு நான்

13

எல்லோருக்குமாக
தற்கொலை
செய்து கொண்டேன்
எழுபது முறை

எனக்காக
வாழ வேண்டும்
ஒரு முறை

14

காட்டுக்கு
மிருகங்கள்
தேவை என்பதால்
காட்டை
அழிக்கவில்லை

மிருகங்களுக்கு
காடு
வேண்டும் என்பதால்
மிருகங்களை
அழிக்கவில்லை

எனக்குள் இருக்கிறது
காடும் மிருகங்களும்

2 comments:

  1. //எல்லோருக்குமாக
    தற்கொலை
    செய்து கொண்டேன்
    எழுபது முறை

    எனக்காக
    வாழ வேண்டும்
    ஒரு முறை//

    இது போன்றதொரு எண்ணம் எனக்கும் வந்ததுண்டு. அருமை.

    ReplyDelete