Saturday, December 26, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

28

நீ கூவி
விற்றப் பொய்கள்
வேறொரு
சந்தையில்
விற்றுக் கொண்டிருந்தன
நீ படுத்தடங்கப்போகும்
சவப்பெட்டியை

29

ஏற்கவா
தவிர்க்கவா
துள்ளிக் குதிக்கிறது
கேள்வித்தவளை
ஒன்றிலிருந்து
இன்னொன்றிற்கு

30

நண்பனின்
இறுதிச் சடங்கு
பார்த்து விட்டு
திரும்பினேன்
என் மரணத்தை

31

ஒரே புன்னகைதான்
பூச்செண்டும்
தரும்
போர்வாளாகவும்
மாறும்

5 comments:

  1. மிகவும் அழகான வரிகள்...
    என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நீ கூவி
    விற்றப் பொய்கள்
    வேறொரு
    சந்தையில்
    விற்றுக் கொண்டிருந்தன
    நீ படுத்தடங்கப்போகும்
    சவப்பெட்டியை
    ///
    அழகான வரிகள்...

    ReplyDelete
  3. நன்றி கமலேஷ்,பிரியமுடன் பிரபு.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு ராஜா துள்ளிக்குதிக்கும் கேள்வித்தவளை

    ReplyDelete