Saturday, August 14, 2010

ஆதி ஒளி

மூதாட்டியை
கொல்ல வந்தது பாம்பு

அதைப் பார்த்து சிரித்து
புரண்டு படுத்தாள் பாட்டி

அவள் கனவிலிருந்து
போகிறது பாம்பு
சிறகை விரித்து
பறவையாய் ஆகி

ஆதி ஒளியை
தரிசித்தபடி

No comments:

Post a Comment