Thursday, September 23, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

183-

என்போல்
ஒற்றைக் கிளையில்
மதிய காகம்

184-

கதை சொன்ன குருவி
பறந்து போனது
என்னையும் கதாபாத்திரமாய்
எடுத்துக் கொண்டு

185-

சுற்றிலும் நாடகங்கள்
என் வேடத்தை
பலப்படுத்த வேண்டும்

1 comment:

  1. 183.
    தனிமையின் வலி உணர்த்தும் அருமையான வரிகள்.

    184.
    உங்களை பாத்திரமாக கொண்ட கதை நல்லா இருக்கு.

    185.
    நூறு சதம் உண்மைதான்.

    ReplyDelete