Thursday, December 02, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

244-

கனவிடமே
விட்டுவிடுகிறேன்
கனவின் குறிப்புகளை

245-

எதை நினைத்து
அழுகிறாய்

எதை நினைத்து
சிரித்தேனோ
அதை நினைத்து

246-

சொன்னவைகளை
அனாதையாய் விரட்டிவிட்டீர்கள்

சொல்லாதவைகளுக்கு
தண்டனை எழுதுகிறீர்கள்

247-

மழை
துளியிலமர்ந்து இறங்குகிறேன்
பூமிக்கு

No comments:

Post a Comment