Sunday, January 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

307-

நானூற்றிய நான்
வழிகிறது
நானற்ற வெளியில்

308-

எத்தனையோ முறை
பதுங்கிப்போனேன்
ஒரு முறையும்
பாயக்காணோம்

309-

யார் அள்ளிப்போட
மனதில் தேங்கிய
மலம்

310-

நான் சென்றபோது
யாருமில்லை
வெளியேறியபோது
எல்லோரும்
இருந்தார்கள்

311-

வாடிப்போயிருக்கிறது
வனத்தின் ஞாபகம் வந்த
பால்கனிச் செடி

312-

கண் மூட
கண்டேன்
தூசிகளின் தியானம்

313-

எவ்வளவோ கிடைத்தும்
நழுவிப்போனவை மீதே
தொற்றித் திரிகிறது ஏக்கம்

314-

அப்பாவும் நானும்
ஒன்றாகவேப் பிறந்தோம்
வேறு வேறு வருடங்களில்

1 comment:

  1. ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன் நல்லாருக்கு

    ReplyDelete