Sunday, January 30, 2011

காரணம்

பல காரணங்கள்
சொல்லியாயிற்று
நான் வாழ்வதற்கு

செவி குவித்து
கேட்காதது
உங்கள் தவறுதான்

பல நூறு காரணங்கள்
சொல்லியாயிற்று
நான் வாழ்ந்தே தீருவதற்கு

செவி குவித்து
கேளாதுபோனது
உங்கள் தவறுதான்

சரி
இப்போது கேளுங்கள்

ஓரே ஒரு
காரணம்தான் இருக்கிறது

நான் மரணித்துப் போகாமல்
இருப்பதற்கு

ஒரே ஒரு காரணம்

நான் வாழ வேண்டும்

No comments:

Post a Comment