Wednesday, February 09, 2011

சக்கர நாற்காலியில் உறங்கும் பூனை

சக்கர நாற்காலியில்
உறங்கும் பூனையை
வரைந்த ஓவியர்
மதிய களைப்பில்
சற்று கண்மூடினார்

வெயில்பட
கண் விழித்தது பூனை

உறங்கியவரைப் பார்த்தது

நிறங்களை முகர்ந்தது

பாய்ந்து
ஓடிப்போக எழ
சக்கர நாற்காலி
மெல்ல நகர
வந்த ஒலிகேட்டு
முன்போலவே
கண் மூடியது

ஜன்னல் மோத
எழுந்த ஓவியர்
பூனைமேல் விழுந்த
வெயிலை மூடி
வண்ணங்கள் எடுத்து
பூனைக்கு இன்னும்
உயிரேற்றத் தொடங்கினார்

No comments:

Post a Comment