Friday, February 25, 2011

நுட்பம்

மிருதங்கம் வாசிப்பவரின்
விரல்களுக்கும்
வாத்தியத்துக்கும்
இடையில்
நீந்தும் இசை
அவர் காதுக்கு மட்டுமே
சென்று சேர்கிறது

காற்று
பிடிக்க நினைத்து
முடியாமல் போகிறது

பின் அந்த இசையை
அவர் வாசிக்கத் தொடங்குகிறார்
நமக்காக

இன்னும் நுட்பத்துடன்
விரல்களால்
இசையை செதுக்குவதைப்போல

No comments:

Post a Comment