Sunday, February 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

388-

கண்ணீர்
எனது திரவ புன்னகை
என்றான்

யாராலும் அவனை
அழவைக்க
முடியவில்லை

389-

தயங்கி தயங்கி
சொல்ல நினைப்பவனை
கைவிடுகினறன
வார்த்தைகள்

தயங்காமல்
சொல்ல நினைப்பவனை
அழைத்துச் செல்கிறது
மொழி

390-

நுனி பிடித்து
நடக்கிறேன்

நுனி என்று
எதுவுமில்லை

நடக்கிறேன்

நுனி பிடித்து

எனை பிடித்து

391-

நீங்கள் சிந்திய சொல்
முள்ளாய்
விளைந்து கிடக்கிறது
சொல்லாமல்
சென்றுவிடுங்கள்

392-

அரங்கம் முழுதும்
பார்க்க வேண்டும்
மேடையில் நிற்கிறான்
மேடை பார்க்கிறது
அவனையும்
அரங்கையும்

1 comment:

  1. //
    கண்ணீர்
    எனது திரவ புன்னகை
    என்றான்

    யாராலும் அவனை
    அழவைக்க
    முடியவில்லை
    //

    intha varudaththin sirantha kavithaiyaaga ithai thervu seiyalaam.....

    marakkave mudiyaathunga.
    avvalavu pidichurukku.

    ReplyDelete