Friday, February 25, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

383-

பூமிக்கு பாரமாக
நான் விட்டுப்போகும்
இந்த காலடித்தடங்களை
மன்னித்துவிடுங்கள்

384-

பொருளற்றது
என் வாழ்க்கை
சொல்லிச்செல்கிறான்
வழிப்போக்கன்

385-

என்னை
வழி நடத்தும்
நானை
வழி கடத்த
முடியாது
யாரும்

386-

சொல்
மேல்
சொல்
அதன்
மேல்
சொல்
சொல்
இப்படி
மேல்
மேல்
சொல்
சொல் என
அடுக்கி வைத்து
உச்சி நின்று
குதிக்கிறேன்

உடல் வாங்கிய
நீரலையில்
ஒதுங்குகிறது
ஒவ்வொரு
சொல்லும்
சத்தமற்று

387-

என்னைப் பார்த்து
நிராயுதபாணி என
முன்னேறாதீர்கள்

ஆழ்மனத்தின்
ஆழத்தில்
பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன
கத்திகள்

1 comment: