Sunday, March 06, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

396-

அசைந்த கிளையில்
அசையும் அழகு
நின்ற பின்னும்

397-

தவம்
பிசகா
தவம்
செய்

398-

பிடிக்கப் பார்த்தும்
நழுவி
நதியில் குதித்தோடும்
வார்த்தைகள்

399-

தோல் கிழிக்கும் பார்வைகள்
உள்ளிறங்கும்
கத்திகளாக

1 comment: