Thursday, April 28, 2011

விட்டு வந்த வார்த்தை

வனத்தில்
விட்டு வந்த வார்த்தை
அடுத்த முறை
சென்றபோது சொன்னது

நான் இங்குதான்
முளைத்திருக்கிறேன்
கண்டுபிடி என்று

திரும்பும் வரை
தெரிந்துகொள்ள முடியவில்லை

வெளியேறியபோது
சிரிப்பு சத்தம் வந்தது

அது வனத்திடமிருந்தா
வார்த்தையிடமிருந்தா
தெரியவில்லை

2 comments:

  1. தரமான படைப்பு
    வனத்தில் விதைத்து வந்த போதே
    அது மனத்திலும் விதைக்கப்பட்டுவிடுவதால்
    வருகிற வினை இது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete