Wednesday, May 18, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

495-

நடந்தவர் சொன்னார்
நான் வழிகளில்
பயணம் செய்யும் போதே
வரிகளிலும் பயணிப்பவன்

496-

தூர்ந்து போன கிணறாய்
சிலர் மனம்
இறைக்க முடியாமல்
தாகம் தீர்க்க முடியாமல்

497-

திட்டம் மாற்றப்பட்டது
இன்று பயணம்
எனக்குள்தான்

498-

என்ன வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள்

எதுவுமில்லையே

உங்களுக்கு
எடுக்கத் தெரியவில்லை

அடுத்தவர் வாருங்கள்

499-

நீர் வற்றிப்போனாலும்
மணல் மிதந்து போகிறது
சொப்பனப் படகு

500-

திறக்க
உள்ளிருக்கும்
பிரபஞ்சம்

No comments:

Post a Comment