Thursday, July 21, 2011

மழை

மழை நம்மை
குழந்தையாக்கிவிடுகிறது
சரிதானே

ஆமாம் என்கிறார் அப்பா

நனையும் மழை
இன்னும்
குழந்தையாக்கி விடுகிறது
இதுவும் சரிதானே

சொல்லி ஓடுகிறாள் குழந்தை
கூப்பிடும் மழையிடம்

1 comment:

  1. கூடவே ஓடி விட துடிக்கிறது தானும் குழந்தையாகிவிட்ட மனது. அழகான கவிதை ராஜா.

    ReplyDelete