Tuesday, August 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

614-

முறிந்து போன `
புன்னகை
ஒட்டப் பார்க்கிறது
கண்ணீர்

615-

இருளில்
நெய்த வழியில் நடந்தேன்
இருளின்
துணைகொண்டு

616-

என்ன செய்ய
அபத்தமான வரிகளுக்கிடையில்
அகப்பட்டுக் கொள்கிறோம்
சில நேரம்

617-

போதும் என்று
சொல்லக் கற்றுக்கொள்
வானம் சொன்னது

சொல்லிப் பார்த்தேன்

வானத்தின் விசாலம்
போதும் என்ற வார்த்தைக்குள்
வந்திருந்தது

618-

இரண்டாவது நாக்காலும்
பேசுவேன்
சில நேரம்
அது தெரியாது
உங்களுக்கும்
முதல் நாக்குக்கும்



1 comment: