Tuesday, September 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

654-

நான் சினம்
அணிந்த சிவம்
சினம் உதிர்ந்தால்
எதுவுமற்ற சவம்

655-

புள்ளியில்
வந்து நின்றேன்
இனி புள்ளியை
நகர்த்த வேண்டும்

656-

மழை பெய்கிறது
தனிமையின்
மீதும்

657-

கண் மூட
அழைத்துப் போனது
இருள்
கண் திறக்க
வரவேற்றது
வெளிச்சம்

658-

பெரு மூச்சில்
இறங்கி விழும்
ஏக்கம்

659-

தன் நடையில்
பாய்ச்சல் உண்டு என்றவர்
உடனே வந்து சேர்ந்தார்

தன் நடையில்
ஓட்டம் உண்டு என்றவர்
அடுத்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
நடை உண்டு என்றவர்
தொடர்ந்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
என்ன உண்டு என்றவர்
வந்து சேரவே இல்லை

No comments:

Post a Comment