Saturday, January 28, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

834-

உன்னால் பாயமுடியாது
வேகமாக பாய்ந்தேன்
குரல் நின்று போனது

835-


காட்சிக்கும் பார்வைக்கும்
இடையில்
உதிரிகளாக
தென்படாதவைகளும்

836-

உப்புகரிக்காத
கண்ணீர்துளி என்று
ஒன்றும் இல்லை

837-

ஏதோ குறைகிறது என்று
எழுத்து ஏற்படுத்தும் சமிக்ஞை
படைப்பின் பூரணத்துவத்தை
பரிசோதிக்கச் செய்கிறது

838-

கொஞ்சம் ஓய்வு தேவை
என்ற வரி
நிறைய வேலை தேவை
என்ற வரியிடம்
சரணடைந்து விடுகிறது

No comments:

Post a Comment