Tuesday, February 07, 2012

பதில்

கவிதையில் ஊர்ந்து சென்ற
எறும்பிடம் சொன்னேன்
ஏதாவது ஒரு எழுத்தை
இழுத்துச் செல்லேன்
உனக்கு உணவாகும் என்று
கவிதையின்
மொத்த அர்த்தத்தையும்
எடுத்துச் செல்கிறேன்
தெரியவில்லையா உனக்கு
எனச் சொல்லிப் போனது

1 comment:

  1. ஆமாங்க எறும்போடு பேசிய விதம் அருமை .

    ReplyDelete