Saturday, March 03, 2012

கவிதையில் தைப்பவன்

மரணம் கிழித்துப் போட்டவனை
கவிதையில் தைத்துக்கொண்டிருக்கிறேன்
என்றவனை
மழை பெய்யும் இரவில்
சந்தித்தேன்

காப்பாற்றி விடுவாயா என்றேன்

முகநீரைத் தள்ளியபடி சொன்னான்

முயன்று பார்ப்பேன்
இல்லையெனில்
என் கவிதையும்
அவனோடு சேர்ந்து
இறந்து போகும்

No comments:

Post a Comment