Sunday, May 20, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

886-
தொடாத வானம்
தொடச் சொல்லும்
ஞானம்
887-
மனது
கலப்படமானது.
கலப்படம் 
பழகிப் போனது
888-
உதிர்ந்த இலையின் 
ஞாபகத்தில் மரத்தின் 
ஒன்றிரண்டு சொற்கள்
889-
குருவே நான் அமைதியாக 
யோசித்துக் கொண்டிருக்கிறேன் 
நீங்கள் 

அமைதியை 
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
890-
நன்றியால் 
நெய்த அன்பில் 
நானும் 
ஓர் இழை
891-
இருள் வனத்தில்
ஒளிக்கோலம்
மின்மினிப்பூச்சி
892-
வழி அடைக்கப்பட்டிருக்கிறது 
என்றவன் 
நின்று கொண்டிருந்தான்

பிரபஞ்சம் திறந்திருக்கிறது 
என்றவன் 
நடந்து கொண்டிருந்தான்
893-
நாடக கண்ணீர
புரிஞ்சிக்கிட்டேன்
அது வேஷம்
கலைச்சப்ப
விழிச்சிக்கிட்டேன்
894-
எதற்கு நின்றுகொண்டிருக்கிறாய் 

ஓடி வந்ததை 
அசை போடுகிறேன் 

அதை ஓடியபடியே செய் 
ஓடு
895-
பசியை இலையாய் 
விரித்து வைத்திருக்கிறேன் 
நீங்கள் என்ன 
பரிமாறினாலும் 
எனக்கு சம்மதம்
896-
என் மீதி நான்கள் 
உங்களுக்குள் 
இருக்கிறார்கள்
897-
தவமிருந்தவன் 
தூங்கிப்போனான் 
அவன் வரத்தை 
யாரோ ஒருவன் 
வாங்கிப்போனான்
898-
நினைவின்
பெரும் குகை
உள்ளிருள்
அழகு




No comments:

Post a Comment