Sunday, August 12, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

950-

மெளனத்தில் 
புதைந்து போனாலும் 
இறந்து போவதில்லை 
வார்த்தைகள்

951-

எல்லோரும் 
திருடர்கள் 
அளவுகள்தான் 
வித்தியாசம்

952-

கனவில் 
திறந்து மூடும் 
சவப்பெட்டி 
ஒரு முறை 
கிள்ளிப் பார்த்து 
புரண்டு படுத்தேன்

953-

வனம் வந்த 
கனவால் 
புல் கொள்ளும் 
பெருமிதம்

954-

புள்ளியை உரித்தேன்
நகம் 
ருசியறிய

955-

அழகான 
இந்த வரியைக் 
கிளறிப் பார்க்காதீர்கள்
அழகற்று எதுவும் 
இதில் 
ஒளிந்திருக்கவில்லை

956-

கலைக்கும் நேரம்தான் 
எனக்கு 
வேஷம் போடுவதற்கும்




No comments:

Post a Comment