Saturday, January 19, 2013

குழந்தையின் பூந்தோட்டம்


குழந்தை வரைந்தாள் 
பூந்தோட்டம் 

அசலாய் 
அப்படியே 

பட்டாம்பூச்சி வந்து 
ஏமார்ந்து போகும்படி 

உற்று கவனித்தால் 
வாசனை நாசி தட்டும்

வண்ணம் விதைத்து 
வளர்ந்த தோட்டம்

அவளிடம் மெல்லக் கேட்டேன்

உன் தோட்டத்திற்கு 
இரவு காவலிருக்கலாமா

கண்கள் மலரச் சொன்னாள் 

உங்களை வரைந்து வேண்டுமானல் 
காவலுக்கு வைக்கலாம் 
அப்படியே முடியாது




1 comment: