Thursday, March 07, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

991-
நினைவின் திரியில் 
அசையும் 
சுடர் நீ

992-

பகலில் 
வெயில் இறைக்கும் சொற்கள் 
தனிமைக்குப் 
போதுமானதாக இல்லை

993-

உங்கள் அருகிலேயே 
இருக்கிறீர்கள் 
எதற்குத் தேடுகிறீர்கள்

994-

நீரில் தெரிகிறது 
எளிய பிம்பம் 
கல்லெறிந்து 
கலைத்துவிட்டு 
வரையப் பார்க்கிறேன்

995-

ஊர்ந்து போகும் தடத்தை 
ஒற்றைக் கோடாக பார்க்கிறேன் 
பாதையாகப் 
பார்க்கச் சொல்கிறது எறும்பு



2 comments:

  1. // நினைவின் திரியில்
    அசையும்
    சுடர் நீ// - அருமை!

    ReplyDelete