Saturday, May 04, 2013

முகச்சாயல்

கடந்து போன நபர் 
இறந்து போன நண்பனின் 
முகச்சாயலில் இருந்தார்

ஒரு கணம் கலங்கி 
கண் துடைத்து 
அவரைப் பார்த்து 
புன்னகைக்க 
புன்னகைத்தார்

அதுவும் அச்சு அசலாய் 
நண்பனைப் போலிருந்தது

மாதவா என்று 
மனதிற்குள் 
ஒரு சத்தம் 
துள்ளி எழுந்து 
அடங்கியது

நண்பன் போய்விட்டான் 
அவர் போய்விட்டார் 
நான் போய்க் கொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment