Tuesday, September 10, 2013

நன்றியின் வண்ணங்கள்

பேருந்தில் 
நின்றிருக்கும் முதியவருக்கு 
ஒரு இருக்கை வரைந்து 
அமரச் சொல்கிறாள் மான்யா  

இறங்கும் இடம் வர 
எழும் பெரியவர் 
நாற்காலியின் வண்ணத்தால்
குழந்தையின் உள்ளங்கையில் 
நன்றி என்று 
எழுதி விட்டுப் போகிறார் 

2 comments:

  1. இரண்டு குழந்தைகள் இருக்கை என்னும் கையில் வரைந்த ஓவியங்கள் புன்னகைக்கின்றன ..!

    ReplyDelete