Thursday, January 09, 2014

ஏன் கொன்றீர்கள்

அதுவாக
அமைதியாக
போய்க் கொண்டிருந்தது
அதை ஏன் கொன்றீர்கள்

என்ன கேள்வி இது
விஷப்பாம்பு
விட்டால் கடித்து விடும்
பிறகு மரணம்தான்

அவ்வளவு பயமா
உங்களுக்கு

ஆமாம்

அப்படி என்றால்
முதலில் நீங்கள்
உங்கள் பயத்தைதான்
கொன்றிருக்க வேண்டும்

பாம்பை அல்ல

1 comment: