Sunday, March 09, 2014

இரண்டு மெழுகுவத்திகள்

இரண்டு மெழுகுவத்திகள்
தம் சுடரில் அசையும் 
அழகு பற்றி பேசின
தம் நிழல்கள் தாளலயத்துடன் 
நடனமிடுவதை ரசித்தன
உரையாடல் 
வெளிச்சம் சார்ந்தே நீண்டது
இரண்டும் 
கடைசி வரை 
தாம் உருகுவது பற்றி 
பேசிக் கொள்ளவே இல்லை

1 comment:

  1. ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete