Saturday, July 12, 2014

நமக்கு நனையத் தெரியவில்லை

1-

வெறும் கைகளுடன் 
திரும்புகிறார் அப்பா 
அந்தக் கைகளுக்கு 
முத்தம் தருகிறாள் குழந்தை

2-

மழைக்குள் இருக்கும் 
குழந்தைகளுக்கு 
நனைவது தெரியவில்லை 
மழைக்கு வெளியே 
இருக்கும் நமக்கு 
நனையத் தெரியவில்லை

1 comment:

  1. முதல் கவிதை சூப்ப்பர். அன்பைத் தவிர வேறெதும் எதிர்பார்க்காத குழந்தை அமைய கொடுத்து வச்சிருக்கனும்.

    ReplyDelete