Tuesday, July 22, 2014

உற்றுப் பார்க்கிறது இரவு

நேரம் கடக்க 
பெருமூச்சு விட்டு 
அங்கும் இங்கும் 
பார்த்து
பசியை எச்சிலில் 
துப்பியபடி
யாராவது கிடைப்பார்களா என 
இரவிடம் கேட்கிறாள்
கால் ஊனமானப் பெண் 
சொல்ல வார்த்தைகள் 
எதுவும் இன்றி
அவளையே 
உற்றுப் பார்க்கிறது
இரவு

2 comments: