Saturday, March 05, 2016

பாக்கியவான்கள்

தாளமிட்டு
வானம் பார்த்து
கை குவித்து
ஆடியபடியே
பெரு மழையில் நனையும்
பைத்தியக்காரன்
தன்னை நிறுத்தி
மூச்சிறைக்க
வேடிக்கைப் பார்ப்பவர்களைப்
பார்த்துச் சொன்னான்
என் கண்ணீரைப் பார்ப்பவர்கள்
பாக்கியவான்கள்

No comments:

Post a Comment